Wednesday, August 17, 2011

உறவுகளை இழந்துவிட்டு....

தொலை தூரத்தில் தொலைந்து விட்ட‌
உறவுகளின் நினைவுகள்
நித்தமும் விழிகளைக்
காயப்படுத்திக் கோண்டேயிருக்கிறது...

புண்பட்டுக் கதரும்
நேஞ்ச‌த்தின் வேதனைகள்
இரவுகளில்
விடியுமட்டும்
விழிநீர் பொழிகிறது...

சொந்தங்கள் சுகங்களை
இழந்து துடிக்கும்
உள்ளத்தின் வலிகள்
நீண்ட நெடிய பிரிவை
நினைந்து நினைந்து
தேம்புகிறது...

கண் துடைக்க சென்ற‌
புறங்கைகள்
விழி நீர் வெள்ளத்தில்
அமிழ்ந்து போகிறது...

என்றாலும் மீட்டுவதற்கு
நினைவுகளாவது எஞ்சியிருக்கிறதுவே
நம்பிக்கையுடன் தொடர்கிறது
பயணம்.....

No comments:

Post a Comment