(ஆதாரம் தினக்குரல் 26-04-2012, தினகரன் 27-04-2012)
அம்பாறை மாவட்டம்
இதன்படி அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட குழு தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. ஆகவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் தாம் அரச காணிகள் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஜனாப் கே.எல்.எம்.முஸம்மில் செயலாளர் "அம்பாறை மாவட்ட காணிப்பிரச்சினைகள் குழு” மாவட்ட அரசாங்க காரயாலயம், அம்பாறை என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு காணி ஆனையாளர் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள்
மாகாணக் காணி ஆணையாளரால் மேற்படி மாவட்டஙகளில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைக்குள்ளான பொதுமக்கள் மேற்படி மாவட்டங்களின் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயங்களுடன் அல்லது மாகாணக் காணி ஆணையாளருடன் முறைப்பாடுகளை அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) வின் சிபார்சுகள்
நடந்தேறிய வன்செயலின் போது காணி இழந்த முஸ்லிம்களின் விபரங்கள் கிழக்கு முஸ்லிம் சமாதான பேரவையிடமிருந்து பெறப்பட்டுள்ளன. அவற்றின் விபரமாவது
விஸ்தீரணம்
ஏக்கர் றுாட் பேச்சஸ்
- அம்பாறை மாவட்டம் 16,764 01 14
- மட்டக்களப்பு மாவட்டம் 28,813 00 33
- திருகோணமலை மாவட்டம் 17092 02 26
ஆகவே மேற்படி 03 மாவட்டங்களிலும் வன்செயலில் காணி இழந்த முஸ்லிம், தமிழ் மக்கள் தமது காணிகளை மீளப்பெற சம்பந்தப்பட்ட விசாரனைக் குழுக்களிடம் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment