Wednesday, May 30, 2012

வெற்றி நிச்சயம்

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக
மரங்கள் வருத்தப்படுவதில்லை.

தென்றல் நின்று போகும்
என்பதற்காக
மலர்கள் வருத்தப்படுவதில்லை.

நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக
வானம் வருத்தப்படுவதில்லை.

பிறகு
ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்? 
இரா. பெருமாள்

No comments:

Post a Comment