Friday, April 19, 2013

விட்டுக் கொடுப்பும், சகிப்புத் தன்மையும் - சகோதரத்துவத்தின் அடிப்படைப் பண்புகள்

இஸ்லாம் உயர் பண்பாடுகளின் மார்க்கம். மனிதர்களைப் புனிதர்களாகச் செதுக்கும் ஓர் சிற்பி. அதன் கொள்கை கோட்பாடுகள் அத்தனைக்குள்ளும் உயர் பண்பாட்டு விழுமியங்கள் செறிந்து காணப்படுகின்றன.

அந்தவகையில் சகோதரத்துவத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகவும், குடும்ப வாழ்வின் நீட்சிக்கும், சுபீட்சத்திற்கும் பங்களிக்கும் காரணியாகவும் இருக்கும் ஒரு பண்பே விட்டுக் கொடுப்பும், சகிப்புத் தண்மையுமாகும்.

உண்மையில் சில உயர் பண்பாடுகளைப் பொருத்தவரையில் அவைகளை நடைமுறைப் படுத்துவது என்பது பாகற்காயை சாப்பிடுவது போன்றதாகும். எல்லோராலும் சாத்தியப்படுத்துவது கடிணம். அதன் உடணடி பலனை எதிர்பார்க்காமல் பொருமையாக நடைமுறை வாழ்விற்கு கொண்டுவரும் போது அதன் விளைவு சாதகமானதாகவே காணப்படும்.

குறிப்பாக குடும்பவாழ்விலும் பொதுவாக தணிமனிதர்களுக்கிடையிலும் இப்பண்பு இருக்கும் காலமெல்லாம் பரஸ்பர அன்பும், சுபீட்சமும் என்றும் இருக்கும். மாறான முன்கோபமும், பிடிவாதமும் நிலைகொண்டால் நிலமை திசைமாறும்.

பண்பாட்டுச் சீலர் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் போதுமானளவு முன்மாதிரிகளை இப்பண்பிற்கு உதாரணங்கான முடியும்.
அவைகளை அடுத்த சந்திப்பில்
பேசுவோம்

No comments:

Post a Comment